அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!ராஜஸ்தானில் மர்ம காய்ச்சலுக்கு 5 குழந்தைகள் பலி! கண்காணிப்பு தீவிரம்!தில்லிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாட மாட்டார்!தேர்தலுக்கிடையே நாடாளுமன்ற கூட்டத்தொடர்: மத்திய அரசு மீது திருச்சி சிவா குற்றச்சாட்டுதமிழக தலைமைச் செயலர், லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபி மாற்றம்!
/

பிரிட்டனிலிருந்து கேரளம் வந்த மேலும் 10 பேருக்கு கரோனா

பிரிட்டனிலிருந்து கேரளத்திற்கு வந்த மேலும் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா அறிவித்துள்ளார்.

News image

கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா (கோப்புப்படம்)

Updated On :29 டிசம்பர் 2020, 9:27 am

பிரிட்டனிலிருந்து கேரளத்திற்கு வந்த மேலும் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா அறிவித்துள்ளார்.

அவர்களுக்கு புதிய வகை கரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதா என்பதை கண்டறியும் வகையில் அவர்களது மாதிரிகள் புணே ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. 

இதுதொடர்பாக பேசிய கேரள சுகாதாரத் துறை அமைச்சர் ஷைலஜா, ''பிரிட்டனிலிருந்து கேரளத்திற்கு வந்தவர்களில் மேலும் 10 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதன் மூலம் பிரிட்டனிலிருந்து வந்தவர்களில் மொத்தமாக 18 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. அவர்களுக்கு புதியவகை கரோனா வைரஸ் தொற்று பரவியுள்ளதா என்பதைக் கண்டறிய அவர்களது பரிசோதனை மாதிரிகள் புணே ஆய்வகத்திற்கு அனுப்பிவக்கப்பட்டுள்ளன'' என்று கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.