2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை! ஆஸ்கர் விருது விழா கோலாகலம்!
/

மதிய உணவுத் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருள்கள்: கேஜரிவால்

தில்லியில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :29 டிசம்பர் 2020, 10:02 am

DIN

தில்லியில் அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு அடுத்த 6 மாதங்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருள்கள் வழங்கப்படும் என்று முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளார்.

தில்லி மண்டாவலி பகுதியில் இலவச ரேஷன் பொருள்கள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது,

தில்லி அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு மதிய உணவு அளிக்கும் வகையில், அவர்களது பெற்றோர்களின் வங்கிக் கணக்கில் பணம் செலுத்த தில்லி அரசால் திட்டமிடப்பட்டது.

எனினும் தற்போது அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவுத் திட்டத்தின் கீழ் இலவச ரேஷன் பொருள்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவிவருவதால் பள்ளிகளை தற்போது திறக்க இயலாத சூழல் நிலவுகிறது. இதனால் அடுத்த 6 மாதங்களுக்கு இலவச ரேஷன் பொருள்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கரோனா பரவலால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஒருசில மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில், தில்லியில் தற்போதைய சூழலில் பள்ளிகள் திறக்கப்படாது என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.