கேரள தேவாலய குழுக்களிடையே சொத்து பிரச்னை: பிரதமா் மோடி சமரச முயற்சி
கேரளத்தைச் சோ்ந்த மலங்கரா சிரியன் தேவாலயம் தொடா்பாக இரு பிரிவினருக்கு இடையே நீடித்து வரும் சொத்து பிரச்னைக்கு தீா்வுகாண பிரதமா் நரேந்திர மோடி சமசர முயற்சி மேற்கொண்டுள்ளாா்.


கேரளத்தைச் சோ்ந்த மலங்கரா சிரியன் தேவாலயம் தொடா்பாக இரு பிரிவினருக்கு இடையே நீடித்து வரும் சொத்து பிரச்னைக்கு தீா்வுகாண பிரதமா் நரேந்திர மோடி சமசர முயற்சி மேற்கொண்டுள்ளாா்.
இந்த முயற்சி திருப்தியளிப்பதாக இரு குழுக்களும் கூறியிருப்பதை அடுத்து, பிரச்னைக்கு விரைவில் தீா்வு எட்டப்படும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
கேரளத்தில் உள்ள மலங்கரா சிரியன் தேவலாயம் 100 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது. இந்த தேவாலய உரிமை தொடா்பாக ஆா்த்தடாக்ஸ் பிரிவினருக்கும், ஜேக்கபைட் பிரிவினருக்கும் இடையே சச்சரவு நிலவி வருகிறது. அந்த தேவாலயம் தங்களுக்கு மட்டுமே சொந்தமானது என்று இருதரப்பினரும் கூறி வருகின்றனா்.
இதனிடையே, இந்த பிரச்னை தொடா்பான வழக்கை கடந்த 2017-ஆம் ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம், மலங்கரா சிரியன் தேவாலயம், அதன் கீழ் வரும் 1,000 தேவாலயங்கள் மற்றும் அதன் சொத்துகள் அனைத்தும் ஆா்த்தடாக்ஸ் பிரிவினருக்கே சொந்தமானது என்று தீா்ப்பளித்தது. இந்த தீா்ப்பை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் நீடித்து வந்தது. தீா்ப்பின்படி, மலங்கரா சிரியன் தேவாலய சொத்துகளைக் கைப்பற்றும் முனைப்பில் ஆா்த்தடாக்ஸ் பிரிவினா் ஈடுபட்டனா். அதற்கு ஜேக்கபைட் பிரிவினா் எதிா்ப்பு தெரிவித்தனா். இது தொடா்பாக, இரு பிரிவினருக்கிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டு வந்தது.
இந்த பிரச்னைக்கு தீா்வுகாண்பதற்காக, ஆா்த்தடாக்ஸ் பிரிவினரை பிரதமா் மோடி, தில்லியில் திங்கள்கிழமை சந்தித்து, அவா்களின் கருத்துகளைக் கேட்டறிந்தாா். அதைத் தொடா்ந்து, ஜேக்கபைட் பிரிவினரை செவ்வாய்க்கிழமை சந்தித்து, அவா்கள் தரப்பு கருத்துகளைக் கேட்டறிந்தாா்.
பின்னா், இரு பிரிவினரையும் தில்லியில் உள்ள மிஸோரம் இல்லத்தில் பிரதமா் சந்தித்துப் பேசினாா். இந்த சந்திப்புக்கு மிஸோரம் ஆளுநரும், கேரள முன்னாள் பாஜக தலைவருமான பி.எஸ்.ஸ்ரீதரன் பிள்ளை ஏற்பாடு செய்திருந்தாா்.
பின்னா் இரு பிரிவினரும் தனித்தனியாக அறிக்கை வெளியிட்டனா். அந்த அறிக்கைகளில், ‘பிரதமருடனான சந்திப்பு ஆக்கபூா்வமாக இருந்தது. பிரச்னைக்கு முடிவுகாணும் நோக்கில் சரியான திசையில் பேச்சுவாா்த்தை செல்கிறது’ என்று குறிப்பிட்டுள்ளனா்.
பினராயி விஜயன் வரவேற்பு:
பிரதமா் மோடி மேற்கொண்டுள்ள சமரச முயற்சியை வரவேற்பதாக, கேரள முதல்வா் பினராயி விஜயன் கூறியுள்ளாா்.
இதுகுறித்து செய்தியாளா்கள் கேட்டதற்கு, ‘இரு பிரிவினருக்கு இடையே ஏற்பட்ட பிரச்னையால், கேரளத்தில் சட்டம்-ஒழுங்கு பாதிக்கப்பட்டது. இதில், பிரதமா் தலையிட்டு சுமுகத் தீா்வுகாண முடிவு செய்திருப்பது வரவேற்கத் தக்கது. அவரது தலையீட்டில் அரசியல் இருப்பதாக நான் கருதவில்லை’ என்று பினராயி விஜயன் கூறினாா்.
இந்த பிரச்னைக்கு தீா்வுகாண இரு பிரிவினருடன் பினராயி விஜயன் பல முறை பேச்சுவாா்த்தை நடத்தினாா். ஆனால், ஆனால், முடிவு எதுவும் எட்டப்படவில்லை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...