ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

தில்லியில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான புதிய அரசு 16ஆம் தேதி பதவியேற்பு

அரவிந்த் கேஜரிவால் வருகிற 16ஆம் தேதி தில்லியின் முதல்வராக 3ஆவது முறையாகப் பதவியேற்கவுள்ளார். 

News image
Updated On :12 பிப்ரவரி 2020, 5:29 am

DIN

அரவிந்த் கேஜரிவால் வருகிற 16ஆம் தேதி தில்லியின் முதல்வராக 3ஆவது முறையாகப் பதவியேற்கவுள்ளார். இந்தப் புதிய அரசில் அமைச்சர்கள் உள்ளிட்டோரும் பதவியேற்கவுள்ளனர்.

தில்லியில் மொத்தம் உள்ள 70 சட்டப்பேரவைத் தொகுதிகளில் அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம்ஆத்மி கட்சி 62 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்று தொடர்ந்து 3ஆவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. ஆம் ஆத்மி கட்சிக்கு 53 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.

இதன் மூலம் தில்லி முதல்வராக அரவிந்த் கேஜரிவால் தொடர்ந்து மூன்றாவது முறையாக பிப்ரவரி 16ஆம் தேதி பதவியேற்க உள்ளார். ராம் லீலா மைதானத்தில் இந்தப் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இந்தத் தேர்தலில் பாஜக 8  இடங்களில் வென்றது. பாஜகவுக்கு கடந்த தேர்தலைவிட 6 சதவீத வாக்குகள் அதிகமாக அதாவது 38 சதவீத வாக்குகளும் கிடைத்துள்ளன. 

கடந்த தேர்தலைப் போலவே இந்த தேர்தலிலும் காங்கிரஸ் ஒரு இடத்தில்கூட வெற்றி பெறவில்லை. மேலும் காங்கிரஸ் கட்சிக்கு 5 சதவீத வாக்குகளே கிடைத்துள்ளன. காங்கிரஸ் வேட்பாளர்களில் 63 பேர் டெபாசிட்டுகளை இழந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.