ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

நிர்பயா வழக்கு: குற்றவாளி வினய் ஷர்மாவின் கோரிக்கை நிராகரிப்பு

கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளி வினய் ஷர்மா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

News image
Updated On :13 பிப்ரவரி 2020, 6:51 am

DIN


புது தில்லி: கருணை மனு நிராகரிக்கப்பட்டதை எதிர்த்து நிர்பயா குற்றவாளி வினய் ஷர்மா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை உச்ச நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.

குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட்ட கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து வினய் ஷர்மா தரப்பில் அவரது வழக்குரைஞர் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

மேலும்,நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் தனித்தனியாக தூக்கிலிடுவது தொடர்பாக மத்திய அரசு தொடுத்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர். பானுமதி, அஷோக் பூஷண், போபண்ணா ஆகியோர் அடங்கிய அமர்வு, குற்றவாளி பவன் குமார் குப்தாவுக்கு வாதாட அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் அஞ்சனா பிரகாஷை நியமித்து உத்தரவிட்டனர்.

பவன் குப்தா மட்டுமே இதுவரை தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்யவில்லை, எனவே, அவருக்கு அரசு சார்பில் சட்ட உதவி வழங்கும் வகையில், வழக்குரைஞர் நியமிக்கப்படுகிறார். 

எனவே, அவர் மேல்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யவும், அது நிராகரிக்கப்பட்டால் தூக்கு தண்டனையை எதிர்த்து கருணை மனுத்தாக்கல் செய்யவும் நாளை வரை கால அவகாசம் வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.