அமித் ஷாவுடன் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு!நாங்குநேரி அருகே பொது இடத்தில் நால்வருக்கு அரிவாள் வெட்டு - எஸ்.பி, டி.ஐ.ஜி விசாரணை!கமேனி மனைவி சிகிச்சைப் பலனின்றி இறந்தார்..!துபையில் மீண்டும் விமான சேவை: குறைந்த எண்ணிக்கையில் விமானங்கள் இயக்கம்!விழுப்புரம் - திருவண்ணாமலை இடையே நாளை காலை முன்பதிவில்லா சிறப்பு ரயில் இயக்கம் பிளஸ் 2 பொதுத் தோ்வு: இன்று 9,919 பேர் தேர்வு எழுதவில்லை!சங்கீதா மீதான விமர்சனங்களுக்கு மௌனம் காக்கும் விஜய்: மாதர் சங்கம் கடும் கண்டனம்!யுரேனியம் செறிவூட்டல் நிலையத்தில் அமெரிக்கா தாக்குதல் - ஈரான் குற்றச்சாட்டுஅமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர் எதிரொலி: சென்செக்ஸ் 1,048 புள்ளிகளுடனும், நிஃப்டி 313 புள்ளிகள் சரிவு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: மார்ச் 23-ல் தீர்ப்பு!ஓமனில் எண்ணெய் கப்பல் மீது தாக்குதல்: இந்தியப் பணியாளர் பலி!அமெரிக்க போர் விமானங்களைச் சுட்டு வீழ்த்திய குவைத்!ட்ரோன் ஊடுருவல்: காஷ்மீரில் அனைத்து பள்ளி, கல்லூரிகளும் 2 நாள்கள் மூடல்!இஸ்ரேல் தாக்குதல்: ஈரானில் இதுவரை 555 பேர் பலி!தே.ஜ. கூட்டணியில் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடங்கவில்லை: நயினார் நாகேந்திரன்பொன்முடி மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: தீர்ப்பு தேதி அறிவிப்பு!இஸ்ரேல் பிரதமர் அலுவலகம் மீது தாக்குதல்
/

சட்டப்பிரிவு 370, சிஏஏ முடிவுகளில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்: பிரதமர் மோடி

தேச நலனைக் கருத்தில் கொண்டே சட்டப்பிரிவு 370 ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) போன்ற முடிவுகளை மத்திய அரசு எடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

News image
Updated On :16 பிப்ரவரி 2020, 11:00 am

DIN


தேச நலனைக் கருத்தில் கொண்டே சட்டப்பிரிவு 370 ரத்து, குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) போன்ற முடிவுகளை மத்திய அரசு எடுத்ததாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

உத்தரப் பிரதேச மாநிலம் வாராணசியில் தீனதயாள் உபாத்யாய்-இன் சிலை திறப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி இன்று (ஞாயிற்றுக்கிழமை) பங்கேற்றார். சிலை திறப்புக்குப் பிறகு நிகழ்ச்சியில் பேசிய அவர்,

"சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்வது, சிஏஏ கொண்டு வருவது போன்ற முடிவுகள் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வந்தன. ஆனால் தேச நலனைக் கருத்தில் கொண்டு நாங்கள் இவற்றை கையிலெடுத்தோம். மேலும் இவ்விவகாரங்களில் நாங்கள் உறுதியாகவும் இருப்போம். யாரையும் சாராது சுயமாக இருப்பது தொடர்பாக அரசு செயல்பட்டு வருகிறது.

இலவச சமையல் எரிவாயு இணைப்பு, கழிப்பறைகள் போன்ற எங்களது திட்டங்கள் ஏழைகளிடம் கொண்டு சேர்க்கப்பட்டது. வாராணசியில் ரூ. 25,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் முழுவதுமாக நிறைவேற்றப்பட்டுள்ளது அல்லது முழுமையாக நிறைவேற்றப்படுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. இதற்குக் காரணம், உங்களுக்கு சேவையாற்ற சிவன் என்னை ஆசீர்வதித்ததுதான்.

மருத்துவமனை, பள்ளி, சாலைகள், பாலங்கள் மற்றும் தண்ணீருக்கான ரூ. 12,000 கோடி மதிப்பிலான திட்டங்கள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. மேற்கு உத்தரப் பிரதேசத்துக்கான இணைப்பை மேம்படுத்தி அதை மருத்துவத்துக்கான மையமாக மாற்ற முயற்சிக்கிறோம்.

ரூ. 350 லட்சம் கோடி (5 டிரில்லியன் அமெரிக்க டாலர்) இந்தியப் பொருளாதாரம் குறித்து பேசுகிறோம். அதற்கு சுற்றுலாத் துறை மிக முக்கியப் பங்கு வகிக்கும் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்" என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.