தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆப்கானிஸ்தானில் தலிபான் தாக்குதலில் நீதிபதி சுட்டுக் கொலை 

ஆப்கானிஸ்தானில் மேற்கு ஹெராத் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய..

News image
Updated On :18 பிப்ரவரி 2020, 6:51 am

IANS

காபூல்: ஆப்கானிஸ்தானில் மேற்கு ஹெராத் மாகாணத்தில் தலிபான் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் முதன்மை நீதிமன்ற நீதிபதி உயிரிழந்ததாக அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர். 

ஷைடே பகுதியில் உள்ள இன்ஜில் மாவட்டத்தில் திங்கள்கிழமை இரவு தலிபான் தீவிரவாதிகள் குழு நடத்திய தாக்குதலில் நீதிபதி அப்துல் ரஹீம் அஜீமியை சுட்டுக் கொன்றதாக ஜெய்லானி ஃபர்ஹாத் மாகாண அரசாங்க செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். 

நீதிபதி அஜீமி இன்ஜில் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தின் தலைவராக பணியாற்றி வந்தவர். தலிபான் பயங்கரவாதிகள் குறிவைத்து தாக்கப்பட்டதில் இவர் நேற்றிரவு உயிரிழந்தார். 

மேலும், தெற்கு காந்தஹார் மாகாணத்தின் தான்ட் மாவட்டத்தில் கடந்த வாரத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு போலீஸார் கொல்லப்பட்டனர்.

ஆப்கானிஸ்தான் சுதந்திர மனித உரிமைகள் ஆணையம் (ஏ.ஐ.எச்.ஆர்.சி) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்களின்படி, கடந்த 2019-ல் தலிபான் பயங்கரவாதிகள் நடத்தப்பட்ட தாக்குதல் சம்பவங்களில் 2,800 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 7,950 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.