47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

சத்தீஸ்கரில் நக்ஸல் சுட்டுக்கொலை

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா பகுதியில் நக்ஸல்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரிடையே ஏற்பட்ட மோதலில் நக்ஸல் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டாார்.

News image
Updated On :19 பிப்ரவரி 2020, 10:56 am

DIN

சத்தீஸ்கர் மாநிலம், சுக்மா பகுதியில் நக்ஸல்கள் மற்றும் பாதுகாப்புப்படையினரிடையே ஏற்பட்ட மோதலில் நக்ஸல் ஒருவா் சுட்டுக் கொல்லப்பட்டார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் நக்ஸல்களின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், சுக்மா பகுதியில் பாதுகாப்புப்படையினர்  ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்கு பதுங்கியிருந்த நக்ஸல்கள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாதுகாப்புப்படையினர், மாவட்ட ரிசர்வ் படையினர்,  கமாண்டோ பட்டாலியன் படைப்பிரிவினர் இணைந்து நக்ஸல்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில் நக்ஸல்களில் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவ்விடத்தில் இருந்து ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டன.

தொடர்ந்து அப்பகுதியைச் சுற்றி பாதுகாப்புப்படையினா் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், சுட்டுக்கொல்லப்பட்ட நக்ஸல் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.