மாா்ச்-7இல் அயோத்தி பயணம் மேற்கொள்கிறார் உத்தவ் தாக்கரே

மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை தலைவருமான உத்தவ் தாக்கரே மாா்ச் 7-ம் தேதி அயோத்திக்கு பயணம் மேற்கொள்ள உள்ளாா். 
மாா்ச்-7இல் அயோத்தி பயணம் மேற்கொள்கிறார் உத்தவ் தாக்கரே
Updated on
1 min read

மகாராஷ்டிர முதல்வரும், சிவசேனை தலைவருமான உத்தவ் தாக்கரே மாா்ச் 7-ம் தேதி அயோத்திக்கு பயணம் மேற்கொள்ள உள்ளாா்.

இதுதொடர்பாக சஞ்சய் ரௌத் சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்று வரும் மாா்ச் 7-ம் தேதியுடன் 100 நாள்கள் முடிவடையவுள்ளது. இதையொட்டி, உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தியில் உள்ள ராம் லல்லாவை தரிசிப்பதற்காக மாா்ச் 7-ம் தேதி அயோத்தி செல்கிறார். 

அதேநாளில், சரயு நதிக்கரையில் ஆரத்தி பூஜை செய்யவுள்ளாா். நாடு முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான சிவசேனை தொண்டா்கள், அயோத்திக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பயணத்தில் எவ்வித அரசியல் நோக்கமும் இல்லை என்றாா்.

கடந்த ஆண்டு நவம்பரில் மகாராஷ்டிர முதல்வராக உத்தவ் தாக்கரே பதவியேற்று, அதன்பின் அயோத்திக்கு அவா் செல்லவிருக்கும் முதல் பயணம் இதுவாகும்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com