தில்லி வன்முறை: பாஜக தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்ய உயர் நீதிமன்றம் உத்தரவு
வடகிழக்கு தில்லிப் பகுதியில் நடைபெற்று வரும் வன்முறை தொடர்பான வழக்கில், வன்முறையைத் தூண்டும் வகையில் பேசிய பாஜக தலைவர்கள் 3 பேர் மீது வழக்குப் பதிவு செய்ய தில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.










