காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அலிகாரில் இணையதளச் சேவை மீண்டும் தொடங்கியது

அலிகாரில் 5 நாள்களுக்குப் பிறகு இணையதளச் சேவை இன்று மீண்டும் தொடங்கியது.

News image
Updated On :29 பிப்ரவரி 2020, 5:17 am

DIN

அலிகாரில் 5 நாள்களுக்குப் பிறகு இணையதளச் சேவை இன்று மீண்டும் தொடங்கியது.

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தசச் சட்டத்துக்கு எதிராக நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகின்றன. இந்நிலையில் உத்தரபிரப் தேசத்தின் அலிகார் மாவட்டத்தில் கடந்த 23ஆம் தேதி நடந்த போராட்டத்தின்போது காவல்துறையினருக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. 

இதில் கல்வீச்சு, தீ வைப்பு போன்ற சம்பவங்கள் நடந்தன. இதில் சிலருக்கு காயம் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தினர். மேலும் சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு கருதி அப்பகுதியில் மொபைல் இணையதளச் சேவையும் தற்காலிகமாக துண்டிக்கப்பட்டது. 

தற்போது நிலைமை சீரடைந்த நிலையில் 5 நாள்களுக்குப் பிறகு அலிகாரில் இணையதளச் சேவை இன்று மீண்டும் தொடங்கியது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.