எல்லையில் இருந்து வரும் எந்த சவாலையும் எதிர்கொள்ளத் தயார்: இந்திய ராணுவத் தளபதி
எல்லையில் இருந்து வரும் எந்த சவாலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே தெரிவித்துள்ளார்.

naravane2084751

naravane2084751
எல்லையில் இருந்து வரும் எந்த சவாலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக இருப்பதாக ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே தெரிவித்துள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த ராணுவ தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே கூறியிருப்பதாவது, மேம்படுத்தப்பட்ட ஆயுதங்களை ராணுவத்தில் பயன்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளுடன், வடஇந்திய எல்லைப் பகுதிகளில் படைகளை பரவலாக்கி படைப்பலத்தை மேம்படுத்தி வருகிறோம்.
வடஇந்திய எல்லைப் பகுதியில் இருந்து வரும் எந்த விதமான சவாலையும் எதிர்கொள்ள இந்திய ராணுவம் தயாராக உள்ளது.
இந்திய அரசியலமைப்புக்கு ராணுவம் எப்போதும் விஸ்வாசமாகவே இருக்கிறது. இந்திய அரசியலமைப்பின் வழிகாட்டுதலைப் பின்பற்றியே இந்திய ராணுவம் எப்போதும் செயல்படும்.
இந்திய ராணுவம் என்பது ஒரு தொழிலமைப்புடன் கட்டமைக்கப்பட்ட படை. அதன் ஒவ்வொரு நடவடிக்கைகளும் அதேப் பண்புடன், தார்மீக நன்னடத்தையுடன் எல்லைப் பகுதியில் அமைதியை நிலைநாட்டுவதாகவே இருக்கும்.
நமது படையை, ராணுவத்துக்குள்ளும், அதில் அடங்கிய பிற சேவைகளுடனும் ஒன்றிணைத்து உருவாக்குவதே நமது இலட்சியமாக உள்ளது. அதனை ஒட்டுமொத்தமாக வளர்ச்சியை நோக்கிக் கொண்டுச் செல்வோம் என்று ராணுவத் தளபதி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...