மகாராஷ்டிர காவல்நிலையத்தின் பாதுகாப்பு அறையில் இருந்து 185 செல்போன்கள் திருட்டு
புணே: மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 185 செல்போன்கள் திருடுப் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த வாரம் நடந்த இந்த திருட்டுச் சம்பவம் பற்றி காவல்துறையினர் தற்போது செய்தி வெளியிட்டுள்ளனர்.
கோல்ஹாபூரில் இருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ள ஜெய்சிங்பூர் காவல்நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான செல்போன்கள் இந்த பாதுகாப்பு அறையில்தான் வைக்கப்பட்டிருந்தன. கடந்த வியாழக்கிழமை, அடையாளம் தெரியாத சிலர், இந்த அறையின் பூட்டை உடைத்து அதில் இருந்த சுமார் 185 செல்போன்களைத் திருடிச் சென்றுவிட்டனர் என்று காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.
இது குறித்து காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.