வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

மகாராஷ்டிர காவல்நிலையத்தின் பாதுகாப்பு அறையில் இருந்து 185 செல்போன்கள் திருட்டு

மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 185 செல்போன்கள் திருடுப் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

News image
Updated On :13 ஜனவரி 2020, 6:02 am

PTI


புணே: மகாராஷ்டிர மாநிலம் கோல்ஹாபூர் மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தின் பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டிருந்த 185 செல்போன்கள் திருடுப் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த வாரம் நடந்த இந்த திருட்டுச் சம்பவம் பற்றி காவல்துறையினர் தற்போது செய்தி வெளியிட்டுள்ளனர்.

கோல்ஹாபூரில் இருந்து 38 கி.மீ. தொலைவில் உள்ள ஜெய்சிங்பூர் காவல்நிலையத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

திருட்டு உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில், காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான செல்போன்கள் இந்த பாதுகாப்பு அறையில்தான் வைக்கப்பட்டிருந்தன. கடந்த வியாழக்கிழமை, அடையாளம் தெரியாத சிலர், இந்த அறையின் பூட்டை உடைத்து அதில் இருந்த சுமார்  185 செல்போன்களைத் திருடிச் சென்றுவிட்டனர் என்று காவல்துறையினர் தெரிவிக்கிறார்கள்.

இது குறித்து காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.