வளைகுடாவில் இந்திய மக்களைக் காத்தது பாஜக: பிரதமர் மோடிகாட்டுமன்னார்கோவில் தொகுதியில் திருமாவளவன் போட்டி!வருமான வரி செலுத்தாத குடும்பங்களுக்கு இல்லத்தரசிகள் திட்டத்தில் ரூ. 8,000 கூப்பன் வழங்கப்படும் - திமுக தேர்தல் அறிக்கைமுதலமைச்சர் காப்பீடு திட்டம் ரூ. 10 லட்சமாக அதிகரிக்கப்படும்: மு.க. ஸ்டாலின் வாக்குறுதிபேரிடர் கால இழப்பீடு ஹெக்டருக்கு ரூ. 25 ஆயிரமாக உயர்த்தப்படும் : திமுக வாக்குறுதிமுதல்வரின் காலை உணவுத் திட்டம் 8 ஆம் வகுப்பு வரை விரிவுபடுத்தப்படும் : மு.க. ஸ்டாலின் வாக்குறுதி
/

காஷ்மீரில் இரு பனிச்சரிவுகளில் சிக்கி 8 பேர் பலி

ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் நேரிட்ட இருவேறு பனிச்சரிவுகளில் சிக்கி ராணுவ வீரர்கள் மூன்று பேர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

News image
Updated On :14 ஜனவரி 2020, 9:12 am

PTI

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் நேரிட்ட இருவேறு பனிச்சரிவுகளில் சிக்கி ராணுவ வீரர்கள் மூன்று பேர் உள்பட 8 பேர் உயிரிழந்தனர்.

இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியான மசில் செக்டார் அருகே இருக்கும் ராணுவ நிலையில் பனிச்சரிவு நேரிட்டதில் பணியில் இருந்த 3 வீரர்கள் உயிரிழந்தனர். ஒரு வீரரைத் தேடும் பணி நடந்துவருவதாக பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது.

இந்த பனிச்சரிவில் 5 ராணுவ வீரர்கள் சிக்கிக் கொண்டனர். இவர்களில் 3 வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டன. ஒருவர் மோசமான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். காணாமல்போன மற்றொரு வீரரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

கந்தெர்பால் மாவட்டத்தில் நேரிட்ட மற்றொரு பனிச்சரிவில் சிக்கி பொதுமக்கள் 5 பேர் இறந்தனர். 4 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.