ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

ஆம்புலன்சுக்கு வழிகாட்டிய சிறுவன் உட்பட தேசிய வீரதீர விருதுக்கு 22 சிறார்கள் தேர்வு

ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 2 சிறுவர்கள் மற்றும் கர்நாடகாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் ஆபுலன்ஸுக்கு வழிகாட்டிய சிறுவன் உட்பட 22 பேர் வீரதீர விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

News image
Updated On :21 ஜனவரி 2020, 10:56 am

PTI


புது தில்லி: ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 2 சிறுவர்கள் மற்றும் கர்நாடகாவில் வெள்ளம் சூழ்ந்த பகுதியில் ஆபுலன்ஸுக்கு வழிகாட்டிய சிறுவன் உட்பட 22 பேர் வீரதீர விருதுக்கு தேர்வாகியுள்ளனர்.

இந்திய குழந்தைகள் நல வாரியம் சார்பில் அறிவிக்கப்பட்டிருக்கும் இந்த ஆண்டுக்கான வீரதீர விருதுக்கு 10 சிறுமிகள், 12 சிறுவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடலில் அடித்துச் செல்லப்பட இருந்த தனது 3 நண்பர்களை மீட்டு, தன்னுயிரை இழந்த கோழிக்கோட்டைச் சேர்ந்த 16 வயது சிறுவன் முகம்மது முஹ்சின் அபிமன்யு விருதை மரணத்துக்குப் பிறகு பெறுகிறார்.

கர்நாடகாவில் கடந்த ஆகஸ்ட் மாதம் வெள்ளத்தில் சிக்கியவர்களை அழைத்துச் சென்ற ஆம்புலன்ஸுக்கு வழி காட்டிய வெங்கடேஷ் (11) என்ற சிறுவனும் வீரதீர விருதுக்கு தேர்வாகியுள்ளான் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.