பங்குச்சந்தை: சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் குறைந்தது! ரூ. 5 லட்சம் கோடி இழப்பு!!பெரம்பூரில் விஜய்க்கு எதிராக திலகபாமா! தருமபுரியில் செளமியா அன்புமணி போட்டி!சௌமியா அன்புமணி தருமபுரி தொகுதியில் போட்டி!தங்கம் விலை மீண்டும் குறைவு! இன்றைய நிலவரம்! நாக்பூர் அருகே தடம்புரண்ட மெமு ரயில்! குவைத்தில் மின் உற்பத்தி நிலையம் மீது ஈரான் தாக்குதல்: இந்தியர் பலி 1,100-க்கும் அதிக போலி வெடிகுண்டு மிரட்டல்கள்: மைசூரைச் சேர்ந்தவர் கைது ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?
/

நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மீண்டும் ஒத்திவைப்பு: தில்லி நீதிமன்றம்

நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை மீண்டும் ஒத்திவைத்து தில்லி கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

News image
Updated On :31 ஜனவரி 2020, 12:22 pm

DIN

புது தில்லி: நிர்பயா குற்றவாளிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை மீண்டும் ஒத்திவைத்து தில்லி கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிர்பயா குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிட சரியாக 11 மணி நேரம் 55 நிமிடங்கள் இருந்த நிலையில் தூக்கிலிடுவதை ஒத்திவைத்து இரண்டாவது முறையாக தில்லி கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிப்ரவரி 1ம் தேதி சனிக்கிழமை காலை 6 மணிக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், மறு உத்தரவு வரும் வரை குற்றவாளிகளை தூக்கிலிட தடை விதித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

பிப்ரவரி 1ம் தேதி தங்களுக்கு நிறைவேற்றப்பட உள்ள தூக்கு தண்டனையை ஒத்திவைக்கக் கோரி குற்றவாளிகள் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த தில்லி கீழமை நீதிமன்ற கூடுதல் அமர்வு நீதிபதி தர்மேந்தர் ராணா, தூக்கு தண்டனையை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.