மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

ராஜ்நாத் சிங்கின் லடாக் பயணம் ஒத்திவைப்பு

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெள்ளிக்கிழமை லடாக் பகுதிக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்த நிலையில், அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

News image
ராஜ்நாத் சிங்கின் லடாக் பயணம் ஒத்திவைப்பு
Updated On :2 ஜூலை 2020, 12:35 pm

PTI


புது தில்லி: மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், வெள்ளிக்கிழமை லடாக் பகுதிக்கு பயணம் மேற்கொள்வதாக இருந்த நிலையில், அந்தப் பயணம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சரின் பயணம் ஒத்திவைக்கப்பட்டதற்கான காரணம் உடனடியாக தெரிவிக்கப்படவில்லை.

கடந்த ஏழு வாரங்களுக்கும் மேலாக, இந்திய - சீனப் படைகள் முகாமிட்டு, பதற்றத்தை ஏற்படுத்தி வரும் லடாக் பகுதிக்கு, விரைவில் ராஜ்நாத் சிங் செல்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பகுதியில் பதற்றம் அதிகரித்த நிலையில், கடந்த ஜூன் 23-ம் தேதி ராணுவ தலைமைத் தளபதி எம்எம் நரவணே லடாக் பகுதிக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டு, அங்குள்ள நிலைமைகளை நேரில் ஆய்வு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.