தமிழகம், புதுச்சேரியில் மார்ச் 21-ல் ரமலான் பண்டிகை! - தலைமை காஜி அறிவிப்புடிடிவி தினகரன் நாளை தில்லி பயணம்!வளைகுடா நாடுகளிலிருந்து 2.8 லட்சம் இந்தியர்கள் நாடு திரும்பினர்!மேற்கு வங்க தேர்தல்: பாஜகவின் 2 ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு! சென்னை தென்மண்டல வானிலை மைய தலைவரானார் சிவானந்த தாமோதர பை!ஹெச்டிஎஃப்சி வங்கி தலைவர் அதானு சக்ரவர்த்தி திடீர் ராஜிநாமா!பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சி! ரூ. 13 லட்சம் கோடி இழப்பு!தங்கம் விலை ஒரேநாளில் ரூ. 5,360 குறைந்தது! ஒரு கிராம் ரூ. 13,900 ஆகச் சரிவு!
/

கழிவுநீர்க் குழாய்களை சுத்தம் செய்ய இயந்திரங்கள்: முதல்வர் அசோக் கெலாட்

ராஜஸ்தானில் கழிவுநீர்க் குழாய்களை சுத்தம் செய்வதில் இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்துவதை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுக்கும் முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

News image

ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட்

Updated On :7 ஜூலை 2020, 10:19 am

DIN

ராஜஸ்தானில் கழிவுநீர்க் குழாய்களை சுத்தம் செய்வதில் இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்துவதை உறுதிப்படுத்துமாறு அனைத்து மாவட்ட மாஜிஸ்திரேட்டுகளுக்கும் முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.

எந்த துப்புரவுப் பணியாளரும் கழிவுநீர் கால்வாய்க்குள் இறங்கி சுத்தம் செய்ய நிர்பந்திக்கக் கூடாது என்றும் இனியொரு கழிவுநீர் தொட்டி மரணம் நம் மாநிலத்தில் ஏற்படக்கூடாது என்றும் அதிகாரிகளுடனான காணொலி மாநாட்டில் தெரிவித்தார். 

மேலும் பேசிய அவர், 'துப்புரவுப் பணியாளர்களின் அயராத பணியினால் இன்று மாநிலத்தில் கரோனா தொற்று ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மைப் பணியாளர்களின் சேவை ஈடு இணையற்றது. இந்தியாவில் முதல்முறையாக கரோனா முன்களப் பணியாளர்களுக்கு ரூ. 50 லட்சம் மருத்துவக் காப்பீட்டை ராஜஸ்தான் அரசு வழங்கியுள்ளது' என்று தெரிவித்தார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.