பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

ஒடிசாவில் ஒரு நாள் கரோனா பாதிப்பு உச்சம்; மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது

ஒடிசா மாநிலத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 571 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,097 ஆக உயர்ந்துள்ளது.

News image

ஒடிசாவில் ஒரு நாள் கரோனா பாதிப்பு உச்சம்; மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்தைக் கடந்தது

Updated On :7 ஜூலை 2020, 10:06 am


புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் ஒரே நாளில் அதிகபட்சமாக 571 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அந்த மாநிலத்தில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 10,097 ஆக உயர்ந்துள்ளது.

மாநிலத்தில் கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை இன்று காலை அறிக்கை வெளியிட்டது.

அதில், தனிமைப்படுத்தப்பட்ட மையத்தில் இருந்த 403 பேருக்கும், புதிதாக 168 பேருக்கும் நேற்று ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக கஞ்சம் மாவட்டத்தில் 273 பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது.

இதுவரை மாநிலத்தில் 6,486 பேர் கரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். தற்போது 3,557 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கரோனா பாதித்து இதுவரை 42 பேர் பலியாகியுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.