டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

11 ஆம் வகுப்பு மற்றும் பட்டப்படிப்பு விண்ணப்ப படிவங்கள் இலவசம்: மேகாலய அரசு அறிவிப்பு

11 ஆம் வகுப்பு மற்றும் இளங்கலை, முதுகலை முதல் செமஸ்டர் ஆன்லைன் வகுப்புகளுக்கான படிவங்கள் குறித்து மேகாலய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

News image
கோப்புப்படம்
Updated On :27 ஜனவரி 2024, 4:54 pm

DIN

11 ஆம் வகுப்பு மற்றும் இளங்கலை, முதுகலை முதல் செமஸ்டர் ஆன்லைன் வகுப்புகளுக்கான படிவங்கள் குறித்து மேகாலய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. 

அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகளில் 11 ஆம் வகுப்பு, இளங்கலை மற்றும் முதுகலை முதல் செமஸ்டர் படிப்புகளுக்கான சேர்க்கை படிவங்கள் ஆன்லைனில் மட்டுமே வழங்கப்படும் என்றும் அவை இலவசமாக வழங்கப்படும் என்றும் மேகாலயா அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும், விண்ணப்பப் படிவங்களை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து நிரப்பி அரசு அறிவிக்கும் 5 இடங்களில் ஏதேனும் ஒன்றில் சமர்ப்பிக்க வேண்டும். நாள் ஒன்றுக்கு 200 விண்ணப்பங்கள் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அங்கு ஒரு கவுண்டரில் 40 விண்ணப்பங்கள் மட்டுமே பெறப்படும். 

கரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்து வருவதை அடுத்து பாதுகாப்பு கருதி இந்த விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளன.

மேலும் எந்த ஒரு நபரும் முகக்கவசம் இன்றி விண்ணப்பங்களை சமர்ப்பிக்க நிறுவன வளாகத்திற்குள் அனுமதிக்கப்படமாட்டார்கள். அதே நேரத்தில் 1.5 மீட்டர் சமூக இடைவெளியை அனைவரும் கடைபிடிக்க வேண்டும். நிறுவனத்தின் நுழைவாயிலில் கை கழுவும் திரவம் மற்றும் கைகளை கழுவுவதற்கு போதுமான வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டும். அனைவரும் பரிசோதனை செய்து கொண்ட பிறகே உள்ளே அனுமதிக்கப்படுவர். அதேபோன்று கரோனா வைரஸ் அறிகுறிகள் இருப்பவர்கள் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள். வரும் நபர்கள் தங்களது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிகளை அளித்திருக்க வேண்டும். விண்ணப்ப படிவங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பிறகு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களின் விபரம், அரசு இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.