பெங்களூரு: தனது வாகன ஓட்டுநருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், கரோனா பரிசோதனையில் பெங்களூரு காவல்துறை ஆணையர் பாஸ்கர் ராவுக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டிருந்தாலும், நான்கு நாள்களுக்கு வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.
எனது வாகன ஓட்டுநருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நான்கு நாள்களுக்கு நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொள்கிறேன், பிறகு மீண்டும் கரோனா தொற்றுப் பரிசோதனை செய்து கொள்ளவிருக்கிறேன் என்று ராவ் தனது சுட்டுரையில் தெரிவித்துள்ளார்.
கடந்த மூன்று மாதங்களில் ராவ் இதுவரை நான்கு முறை கரோனா பரிசோதனை செய்து கொண்டுள்ளார், திங்கள்கிழமை எடுக்கவிருப்பது ஐந்தாவது முறையாகும்.
கரோனா பாதித்தவர்கள் சிலருடன் நான் தொடர்பில் இருந்துள்ளேன். ஆனால், உங்களது வாழ்த்துகளால் இதுவரை எனக்கு கரோனா தொற்று பாதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வியாழக்கிழமை நிலவரப்படி பெங்களூருவில் 2,344 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு 25 ஆயிரமாக உயர்ந்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இல்வாழ்வு வேண்டாம்

தற்கொலைக்கு முயன்ற முதியவர்! காப்பாற்றிய தண்டவாள பராமரிப்பாளர்!

ரியான் பராக்கின் பேட்டிங்கில் தவறில்லை, வலுவாக மீண்டு வருவார்: விக்ரம் ரத்தோர்

சிவகார்த்திகேயன் படத்தில் திலீப்?
வீடியோக்கள்

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை


