பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

இல்வாழ்வு வேண்டாம்

'மனைக்கு மாட்சிமைப்பட்டதான குணங்களுடன், தன் குலவளர்ச்சிக்கான பிள்ளைப்பேறும் இல்லாமற் போனாலும், ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டவன், அவளை விட்டு நீங்குவது என்பது முடியாததாகும்.

News image
Updated On :26 ஏப்ரல் 2026, 11:47 am

மாண்ட குணத்தோடு மக்கட்பேறு இல்லெனினும்,

பூண்டான் கழித்தற்கு அருமையால்-பூண்ட

மிடியென்னுங் காரணத்தின் மேன்முறைக் கண்ணே

கடி'யென்றார், கற்றறிந் தார்.

(பாடல் 56 அதிகாரம்: துறவு)

'மனைக்கு மாட்சிமைப்பட்டதான குணங்களுடன், தன் குலவளர்ச்சிக்கான பிள்ளைப்பேறும் இல்லாமற் போனாலும், ஒருத்தியைத் திருமணம் செய்து கொண்டவன், அவளை விட்டு நீங்குவது என்பது முடியாததாகும்.

அதனாலும், தான் மேற்கொண்ட வறுமையால் நேரும் வருத்தம் என்னும் காரணத்தாலும், மேலான முறைமையாகிய துறவொழுக்கத்திலே நிலைபெற்று நின்று, அந்த இல்வாழ்வையே விட்டுவிடுவாயாக' என்பார்கள், நல்ல நூற்களைக் கற்று, உண்மையறிவை அறிந்த சான்றோர்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.