தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!பேரவைத் தோ்தலில் பதிவான வாக்குகள்: அதிகாரபூா்வ விவரம் வெளியாவதில் தாமதம் கேரளம்: புற ஊதா கதிா்வீச்சு அதிகரிப்பு! மக்கள் பாதுகாப்புடன் இருக்க அறிவுறுத்தல்!தலைமைத் தோ்தல் ஆணையரை நீக்கக்கோரி மாநிலங்களவையில் எதிா்க்கட்சிகள் புதிய நோட்டீஸ்டிசம்பரில் இருந்து சுங்கச் சாவடிகளில் இடையூறற்ற சேவை: நிதின் கட்கரி சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு: 6.68 லட்சம் மாணவா்கள் விண்ணப்பம்பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ!
/

கரோனாவில் இருந்து மீண்ட மருத்துவருக்கு 45 நாள்களுக்குப் பின் மீண்டும் கரோனா

நொய்டாவில் மருத்துவர் ஒருவர் கரோனாவில் இருந்து மீண்டு 45 நாள்களுக்குப் பின் மீண்டும் அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

News image

கரோனாவில் இருந்து மீண்ட மருத்துவருக்கு 45 நாள்களுக்குப் பின் மீண்டும் கரோனா

Updated On :17 ஜூலை 2020, 6:15 am


லக்னௌ: நொய்டாவில் மருத்துவர் ஒருவர் கரோனாவில் இருந்து மீண்டு 45 நாள்களுக்குப் பின் மீண்டும் அந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கௌதம் புத் நகர் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வரும் மருத்துவருக்கு பல முறை கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு, அதில், அவருக்கு இரண்டாவது முறை கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குழந்தைகள் நல மருத்துவமனையின் தனிமைப்படுத்தப்பட்ட வார்டில் பணியாற்றி வந்த மருத்துவருக்கு கடந்த மே மாதம் 15ம் தேதி கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 15 நாள்கள் சிகிச்சை பெற்று மே 30-ம் தேதி கரோனா இல்லை என்பது இரண்டு முறை உறுதி செய்யப்பட்ட பிறகு அவர் வீட்டுக்கு வந்து இரண்டு வாரங்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டார். பிறகுதான் அவர் மீண்டும் பணிக்கு வந்தார்.

இந்த நிலையில், பணிக்குச் சேர்ந்த இரண்டு வாரங்கள் கழிந்த நிலையில், அவருக்கு திடீரென மயக்கம் ஏற்படுவதை உணர்ந்தார். ஆனால் காய்ச்சலோ இருமல் போன்ற அறிகுறிகளோ தென்படவில்லை.

முன்னெச்சரிக்கையாக, அவருடன் பணியாற்றிய மருத்துவர்கள் அவரது சளி மாதிரியை எடுத்து பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அதில் அவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டது. பிறகு அதனை உறுதி செய்ய மீண்டும் பரிசோதனை நடத்தப்பட்டு, அப்போது அவருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து நிபுணர்கள் கூறுகையில், இரண்டாவது முறை கரோனா பாதிப்பது என்பது வெகு அரிது, ஒரு வேளை அவர் முதல் முறை கரோனா பாதிப்புக்கு உள்ளாகும் போது முழுமையாகக் குணமடையாமல் இருந்திருக்கலாம்.

ஒருவருக்கு கரோனா பாதிப்பு ஏற்படும் போது அவர்களது உடலில் தோன்றும் நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக, இரண்டாவது முறை நோய்த் தொற்று ஏற்படாமல் தடுக்கப்படுகிறது. சிலருக்கு அந்த நோய் எதிர்ப்பு சக்தி விரைவாகவே குறைந்துவிடும்போது இவ்வாறு நேரிடலாம் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.