மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

எல்லைப் பிரச்னையை தீர்க்க பேச்சுவார்த்தை, எதையும் உறுதியாகக் கூற முடியாது: ராஜ்நாத் சிங்

லடாக் பகுதியில் பாதுகாப்பு சூழலை நேரில் ஆய்வு செய்ய வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லைப் பிரச்னை குறித்து தீர்வு காண சீனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

News image
பாதுகாப்பு சூழலை ஆய்வு செய்ய லடாக் சென்றார் ராஜ்நாத் சிங்
Updated On :17 ஜூலை 2020, 10:48 am

ANI


லடாக் பகுதியில் பாதுகாப்பு சூழலை நேரில் ஆய்வு செய்ய வந்த பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், எல்லைப் பிரச்னை குறித்து தீர்வு காண சீனாவுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. ஆனால், தற்போதைய நிலையில், எதையும் உறுதியாகக் கூற முடியாது என்று தெரிவித்துள்ளார்.

சிறு நிலப்பரப்பைக் கூட இந்தியாவிடம் இருந்து பறிக்கும் சக்தி இந்த உலகிலேயே இல்லை என்றும் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

இந்தியா - சீனா எல்லைப் பிரச்னையை தீர்க்க இரு தருப்பிலும் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

எல்லைப் பிரச்னைக்குத் தீர்வு காண இரு தரப்பிலும் பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆனால், இந்த பேச்சுவார்த்தையின் பயனாக தீர்வு காணப்படும் என்பதை என்னால் அறுதியிட்டுக் கூற முடியாது. ஆனால் நான் ஒன்றை உறுதி அளிக்கிறேன், நமது நிலப்பரப்பில் ஒரு சிறு பகுதியைக் கூட பறித்துச் செல்லும் சக்தி இந்த உலகிலேயே இல்லை. ஒருவேளை பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட்டால் அதை விட சிறந்தது வேறு எதுவும் இல்லை என்று ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.