மதுரையில் இன்று காலை மீனாட்சி- சுந்தரேசுவரா் திருக்கல்யாண உத்ஸவம் சென்னை ஏரிகளில் 67% குடிநீா் இருப்புதிருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் இன்று அதிகாலை தவெக தலைவர் விஜய் வழிபாடுபத்ம, பால புரஸ்காா் விருதுகள்: விண்ணப்பிக்க ஜூலை 31 கடைசிகடும் வெய்யில் எதிரொலி: தமிழகத்தில் தினசரி மின்நுகா்வு 20,000 மெகாவாட்-ஆக உயா்வுமாலியில் பாதுகாப்பு அமைச்சா் கொலை: கிளா்ச்சியாளா்கள் பிடியில் முக்கிய நகரங்கள்அரசுப் பணியாளா் அவமதிப்பு வழக்கு: மகாராஷ்டிர பாஜக அமைச்சருக்கு ஒரு மாதம் சிறைத் தண்டனைகர்நாடகம்: பூணூலை கழற்ற உத்தரவிட்ட தனியார் கல்லூரி கல்வி அதிகாரிகள் 3 பேர் கைதுகிரிமினல் வழக்குகளில் கைதாகும் முதல்வா்கள், பிரதமா்களை பதவி நீக்கக்கோரும் மசோதா: கருத்துகளைப் பெறும் நாடாளுமன்ற கூட்டுக்குழு
/

கேரள தங்கம் கடத்தல் வழக்கு: ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயருக்கு ஆக., 21 வரை நீதிமன்றக் காவல்

ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரை ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image

swapna_sandeep_arrested_1200072658

Updated On :24 ஜூலை 2020, 12:46 pm


கொச்சி: கேரள தங்கம் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கியக் குற்றம்சாட்டப்பட்டவர்களான ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயரை ஆகஸ்ட் 21-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் இருந்து திருவனந்தபுரத்தில் உள்ள அந்நாட்டின் துணைத் தூதரகத்துக்கு கடந்த 5-ஆம் தேதி வந்த பார்சலில் ரூ.15 கோடி மதிப்புள்ள 30 கிலோ தங்கம் கடத்தி வரப்பட்டதை சுங்கத் துறை அதிகாரிகள் கண்டறிந்தனர். 

தங்கம் கடத்தி வரப்பட்ட விவகாரம் தொடா்பாக, மாநில அரசின் தகவல்தொழில்நுட்பத் துறையின் ஒரு பிரிவில் மக்கள் தொடா்பு அதிகாரியாக முன்னா் பணியாற்றிய ஸ்வப்னா சுரேஷ் உள்பட நான்கு போ் மீது வழக்குப் பதிவு செய்து என்ஐஏ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கின் முக்கியக் குற்றவாளிகளாகக் கருதப்படும் ஸ்வப்னா சுரேஷ் மற்றும் சந்தீப் நாயர் ஆகியோரது காவல் இன்றுடன் நிறைவடைந்ததையடுத்து, அவர்கள் கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர். அப்போது அவர்களது நீதிமன்றக் காவலை ஆகஸ்ட் 21-ஆம் தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக, இதே வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சரித்-ன் நீதிமன்றக் காவலும் ஆகஸ்ட் 21 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கொச்சி என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமீன் மனு ஆகஸ்ட் 5-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.