அதன் மீதான விசாரணை நீதிபதிகள் அருண் மிஸ்ரா, பி.ஆா். கவாய், கிருஷ்ணா முராரி ஆகியோா் அடங்கிய அமா்வு முன் திங்கள்கிழமை நடைபெற்றது. அப்போது, சட்டப்பேரவைத் தலைவா் தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், வழக்குரைஞா் சுனில் ஃபொ்னாண்டஸ் ஆகியோா் வாதிடுகையில், ‘இந்த விவகாரம் தொடா்பாக உயா்நீதிமன்றம் புதிய உத்தரவைப் பிறப்பித்துவிட்டது. அதற்கு எதிராக புதிய மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்ததால், கடந்த 21-ஆம் தேதி உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராகத் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவைத் திரும்பப் பெற அனுமதிக்க வேண்டும்’ என்றனா்.