இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

மகாராஷ்டிரத்தில் கரோனாவுக்கு 2 காவலர்கள் பலி: புதிதாக 138 பேருக்குத் தொற்று

மகாராஷ்ர மாநிலத்தில் புதிதாக 138 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில், இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

News image

138 new COVID-19 cases, 2 deaths reported in Maharashtra Police

Updated On :30 ஜூலை 2020, 11:30 am

ANI

மும்பை: மகாராஷ்ர மாநிலத்தில் புதிதாக 138 காவலர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பதிவாகியுள்ள நிலையில், இரண்டு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். 

மகாராஷ்டிரத்தில் இதுவரை 9,096 காவலர்கள் கரோனா பாதித்துள்ளனர். இதில், 7,084 காவலர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 100 காவலர்கள் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.

கரோனா தொற்றுப் பரவல் அதிகரிக்கத் தொடங்கியது முதல் நாட்டிலேயே மகாராஷ்டிர மாநிலம் அதிக பாதிப்புடன் தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளது. இந்த நிலையில், வேறு மாநிலங்களில் இல்லாத அளவுக்கு மகாராஷ்டிரத்தில் முன்களப் பணியாளர்களான காவல்துறையினருக்கு அதிகளவில் கரோனா தொற்றுப் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், மகாராஷ்டிரத்தில் 1,46,433 பேர் மருத்துவமனை சிகிச்சையில் உள்ளனர். இதில் 2,39,755 பேர் குணமடைந்துள்ளனர். 14,463 பேர் பலியாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.