கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி!மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

எல்லையில் அத்துமீறல்: பாகிஸ்தான் பயிற்சி பெற்ற 3 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் நௌசேரா செக்டாரில் உள்ள எல்லைப் பகுதி வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயிற்சி பெற்ற மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெ

News image
Updated On :1 ஜூன் 2020, 6:33 am

ஜம்மு-காஷ்மீரின் ரஜௌரி மாவட்டத்தில் நௌசேரா செக்டாரில் உள்ள எல்லைப் பகுதி வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயிற்சி பெற்ற மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 

நௌசேரா செக்டார் எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் சந்தேகத்துக்குரிய நடமாட்டம் இருப்பதைப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ராணுவ வீரர்கள் கண்டறிந்தனர். அதையடுத்து அவர்கள் விழிப்புடன் இருந்ததால், எல்லை வழியாக காஷ்மீருக்குள் ஊடுருவ முயன்ற மூன்று பாகிஸ்தான் பயிற்சி பெற்ற பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இப்பகுதியில் இந்திய ராணுவம் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். 

முன்னதாக, புல்வாமா காவல்துறை, மத்திய ரிசர்வ் காவல் படை (சிஆர்பிஎஃப்) மற்றும் இராணுவம் ஆகியவற்றின் சரியான நேரத்தில் நடவடிக்கை மேற்கொண்டதால் வாகனம் மூலம் வந்த ஐஇடி குண்டுவெடிப்பு சம்பவம் தவிர்க்கப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.