மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சிக்கிமில் இரண்டாவது நபருக்கு கரோனா தொற்று உறுதி

தில்லியிலிருந்து சிக்கிம் திரும்பிய நபருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அந்த மாநிலத்தில் பாதித்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது என்று மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரி

News image
Updated On :3 ஜூன் 2020, 5:50 am

ANI

தில்லியிலிருந்து சிக்கிம் திரும்பிய நபருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதால், அந்த மாநிலத்தில் பாதித்தோர் எண்ணிக்கை இரண்டாக உயர்ந்துள்ளது என்று மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் புதன்கிழமை தெரிவித்தார். 

கரோனாவால் பாதிக்கப்படாத ஒரே மாநிலமாக இருந்த சிக்கிமில், தற்போது இரண்டு பேருக்கு கரோனா உறுதியாகியுள்ளது. கடந்த 25-ம் தேதி தேசிய தலைநகரிலிருந்து திரும்பிய 56 வயது நபர் செவ்வாய்க்கிழமை இரவு கரோனா இருப்பது கண்டறியப்பட்டது என்று சுகாதார செயலாளர் பெம்பா ஷெரிங் பூட்டியா கூறினார். 

தில்லியிலிருந்து வந்த இதுவரை சிக்கிமின் சுரங்கப் பகுதியில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட முகாமில் தங்கவைக்கப்பட்டனர். இருப்பினும், அதே அறையிலிருந்த மற்றொரு நபருக்கு கரோனா எதிர்மறையாக இருந்தது. சிக்கிமில் தற்போது இரண்டு கரோனா வழக்குகள் பதிவாகியுள்ளன. இவை இரண்டும் அறிகுறியற்றவை என்று பூட்டியா கூறினார். 

பாதிக்கப்பட்ட இருவரும் மாநில தலைநகருக்கு அருகிலுள்ள சொக்கிதாங்கில் உள்ள எஸ்.டி.என்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சுகாதார அதிகாரி தெரிவித்தார். கடந்த மே 23-ல் தென் மாவட்டத்தில் ரபாங்லாவைச் சேர்ந்த 25 வயது இளைஞருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டது. இவர் தில்லியிலிருந்து திரும்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.