லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

டிவி பார்ப்பதை தாய் கண்டித்ததால் மகன் தூக்கிட்டுத் தற்கொலை

வெகு நேரம் டிவி பார்த்த மகனை தாய் கண்டித்ததால் 14 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

News image
கோப்புப்படம்
Updated On :10 ஜூன் 2020, 8:23 am

DIN

வெகு நேரம் டிவி பார்த்த மகனை தாய் கண்டித்ததால் 14 வயது சிறுவன் தற்கொலை செய்துகொண்டுள்ளார். 

மகாராஷ்டிரத்தின் புணே மாவட்டம் பிப்வேவாதி பகுதியில் உள்ள ஆதர்ஷ் சாவலில் சிறுவன், தனது தாய் மற்றும் சகோதரியுடன் வசித்து வந்தான். 

இந்நிலையில் காலையில் இருந்து சிறுவன் தொலைக்காட்சி பார்த்துக் கொண்டிருந்தான். இதைக் கவனித்த சிறுவனின் தாய், அவனை கண்டித்து தொலைக்காட்சியை நிறுத்தியுள்ளார். 

இதனால் கோபமடைந்த சிறுவன் வீட்டின் மேல் தளத்திற்குச் சென்று துணியால்  தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளான். மேல் தளத்திற்குச் சென்ற சகோதரி இதனை பார்த்து தாயை அழைத்துள்ளார். 

சிறுவன் அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அவன் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் அறிவித்துள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.