

தில்லியில் இன்று (சனிக்கிழமை) புதிதாக 2,134 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுபற்றி தில்லி சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பின்படி:
தில்லியில் புதிதாக 2,134 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 38,958 ஆக உயர்ந்துள்ளது. இதில் 14,945 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 1,547 பேர் குணமடைந்தனர்.
மேலும் 57 பேர் பலியானதைத் தொடர்ந்து, மொத்தம் பலியானோர் எண்ணிக்கை 1,271 ஆக உயர்ந்துள்ளது. மொத்தம் 22,742 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.