வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி6 மாநிலங்களுக்கு ரூ.1,912 கோடி கூடுதல் பேரிடா் நிதி: குஜராத்துக்கு மட்டும் ரூ. 778.67 கோடி ஒதுக்கீடுமத்திய அரசைக் கண்டித்து திமுக கூட்டணி கட்சிகள் நாளை ஆா்ப்பாட்டம்ஈரானின் புதிய தலைமை மதகுரு உயிருக்கும் உத்தரவாதம் இல்லை: இஸ்ரேல் பிரதமா் எச்சரிக்கை5 ஆண்டுகளில் 6,800 ஸ்டாா்ட்-அப் நிறுவனங்கள் மூடல்: தகவல் தொழில்நுட்பம், சுகாதாரத் துறைகள் கடும் பாதிப்பு
/

பத்து நிமிடத்தில் ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்த புத்தம் புது யோசனை

கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு புதிய நடைமுறைகளும், விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

News image
Updated On :19 ஜூன் 2020, 9:07 am

ANI


கரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் பல்வேறு புதிய நடைமுறைகளும், விதிமுறைகளும் பின்பற்றப்பட்டு வருகின்றன.

அதில் சில சவால்களாகவும் அமைந்துள்ளன. அந்த வகையில், ரயில் பெட்டிகளை சுத்தப்படுத்தும் பணியில் துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகிறார்கள். ஆனால், ரயில் பெட்டிகளின் மேல் பகுதியை சுத்தம் செய்வது என்பது மிகச் சவாலான பணியாகும்.

Story image

ஆனால் நவீன தொழில்நுட்பத்தின் உதவியோடு அதனை எளிதாக்கியுள்ளது குஜராத் மாநில ரயில்வே நிர்வாகம்.

வதோதரா ரயில் நிலையத்தில் புதிய யுக்தியைப் பயன்படுத்தி ரயில் பெட்டிகள் சுத்தப்படுத்தும் அமைப்பை உருவாக்கியுள்ளனர் அதிகாரிகள். அதன் மேலாளர் பரேஷ் சாவ்டா கூறுகையில், இதன் மூலம் ஒரு ரயில் 8 - 10 நிமிடத்தில் தூய்மைப்படுத்தப்படும். இதில் மறுசுழற்சி முறையில் தண்ணீர் பயன்படுத்தப்படுவதால் நேரமும், தண்ணீரும் மிச்சமாகிறது என்று கூறியுள்ளார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.