இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

கடந்த 24 மணி நேரத்தில் 1.89 லட்சம் கரோனா பரிசோதனை: ஐ.சி.எம்.ஆர்

கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,89,869 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

News image
Updated On :20 ஜூன் 2020, 6:26 am

ANI

புது தில்லி: கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 1,89,869 பேருக்கு கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் (ஐசிஎம்ஆர்) சனிக்கிழமை தெரிவித்துள்ளது.

மேலும், ஒரே நாளில் ஆய்வகங்களால் நடத்தப்பட்ட அதிக எண்ணிக்கையிலான சோதனைகள் இதுவாகும். கரோனா பரவத் தொடங்கியதிலிருந்து இதுவரை 66,16,496 பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது என்றும் ஐசிஎம்ஆர் கூறியுள்ளது.

இதுவரை, நாடு முழுவதும் உள்ள மொத்தம் 953 ஆய்வகங்களில், 699 அரசு ஆய்வகங்கள் மற்றும் 254 தனியார் ஆய்வகங்கள் உள்படத் தொற்றுநோய்க்கான பரிசோதனையை நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் நாட்டில் கரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 3,95,812 ஆகவும், இறப்பு எண்ணிக்கை 12,970 ஆகவும் உயர்ந்துள்ளது. அதே சமயம், 168,636 பேர் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும், 214,206 பேர் நோயிலிருந்து மீண்டு குணமடைந்துள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.