எல்லையில் கிழக்கு லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதிக்கு சீனா உரிமை கோருவதை, ஏற்கவே முடியாதென திட்டவட்டமாக இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.
இதுபற்றி இந்திய வெளியுறவுத் துறைப் பேச்சாளர் அனுராக் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்ததாவது:
"கல்வான் பள்ளத்தாக்கு பற்றிய நிலைப்பாடு வரலாற்று ரீதியாக தெளிவாக உள்ளது. எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி தொடர்பாக மிகைப்படுத்தப்பட்ட மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத கூற்றுகளை முன்வைக்க சீனா மேற்கொள்ளும் முயற்சிகள் ஏற்கத்தக்கவையல்ல. இவை கடந்த காலங்களில் சீனாவின் சொந்த நிலைப்பாட்டுக்கே பொருந்துவதல்ல.
மற்ற இடங்களில் செய்வதைப் போலவே இங்கும் அவர்கள் நடந்துகொள்கிறார்கள். எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியைத் தாண்டி இந்தியத் தரப்பில் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. சொல்லப்போனால், அவர்கள் இந்தப் பகுதியில் நீண்ட காலமாக ரோந்துப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். வேறு எதுவும் நிகழவில்லை.
இதுபோன்று மேற்கொள்ளப்படும் சீனாவின் ஒவ்வொரு அத்துமீறல் முயற்சிக்கும் இந்தியத் தரப்பிலிருந்து தகுந்த பதிலடி தரப்பட்டுள்ளது."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வந்தவாசியில் திருவள்ளுவா் சிலை அமைக்கக் கோரிக்கை

சங்ககிரியில் சித்திரை தோ்த் திருவிழா நிறைவு: மலைக்கு திரும்பினாா் சுவாமி

வெவ்வேறு சாலை விபத்துகளில் மூவா் உயிரிழப்பு

இந்திய யு20 தடகள அணியில் சாதனா ரவி!
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

