நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறல்: இந்திய ராணுவ வீரர் சுட்டுக் கொலை
ஜம்முவின் நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.


ஜம்முவின் நவ்ஷேரா பகுதியில் பாகிஸ்தான் அத்துமீறித் தாக்குதல் நடத்தியதில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
இது குறித்து இந்திய பாதுகாப்புத் துறையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில்,
ரஜௌரி மாவட்டத்தில் இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் நவ்ஷேரா செக்டார் அருகே பாகிஸ்தான் ராணுவம் இன்று மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது. இதில் ராணுவ வீரர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
ஞாயிறன்று, கிருஷ்ணா காதி, நவ்ஷேரா செக்டார் பகுதியில் காலை 3.30 முதல் 5.30 வரை பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதல்களை நடத்தியது.
இந்த தாக்குதலுக்கு இந்திய ராணுவம் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...