நாட்டில் 12-வது நாளாக 10 ஆயிரத்தைத் தாண்டிய கரோனா பாதிப்பு; 312 பேர் பலி

நாட்டில் மேலும் 14,933பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,215-ஆக அதிகரித்துள்ளது. 
ஒரே நாளில் 312 பேர் கரோனாவுக்கு பலி
ஒரே நாளில் 312 பேர் கரோனாவுக்கு பலி
Published on
Updated on
1 min read

புது தில்லி: நாட்டில் மேலும் 14,933பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடா்ந்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 4,40,215-ஆக அதிகரித்துள்ளது. செவ்வாய்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மட்டும் 312 போ் உயிரிழந்தனா்.

இதனால், கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,011 போ் உயிரிழந்துள்ளனர்.

நாட்டில் தொடர்ந்து 12-வது நாளாக கரோனா பாதிப்பு 10 ஆயிரத்தை எட்டி வருகிறது. ஞாயிற்றுக்கிழமை அதிகபட்சமாக கரோனா பாதிப்பு 15 ஆயிரத்தை எட்டியது. 

மகாராஷ்டிரத்தில் அதிகபட்சமாக 1,35,796 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 6,283 பேர் பலியாகியுள்ளனர்.

தலைநகர் தில்லியில் 62,655 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இங்கு மட்டும் இதுவரை 2,233 பேர் பலியாகியுள்ளனர். தமிழகத்தில் 62,087 பேர் கரோனா பாதித்துள்ளனர். இவர்களில் 794 பேர் பலியாகினர்.

அமெரிக்கா, பிரேசில், ரஷியாவுக்கு அடுத்தபடியாக கரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள நாடாக இந்தியா உள்ளது. அதிக உயிரிழப்பைச் சந்தித்த நாடுகள் பட்டியலில் 8-ஆவது இடத்தில் உள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com