பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

படைகள் விலக்கம்: இந்திய, சீன ராணுவத் தளபதிகள் பேச்சில் உடன்பாடு

கிழக்கு லடாக் பகுதியில் படை வீரர்களை பரஸ்பரம் விலக்கிக் கொள்வது என இந்தியா, சீனா இடையே ராணுவத் தளபதிகள் நிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

News image

கோப்புப்படம்

Updated On :21 ஆகஸ்ட் 2020, 12:22 pm

DIN

கிழக்கு லடாக் பகுதியில் படை வீரர்களை பரஸ்பரம் விலக்கிக் கொள்வது என இந்தியா, சீனா இடையே ராணுவத் தளபதிகள் நிலையில் நடைபெற்ற கூட்டத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டுள்ளதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

மோல்டோவில் நடைபெற்ற இந்தப் பேச்சுவார்த்தையில், கிழக்கு லடாக்கில் பிரச்சினைக்குரிய இடங்களிலிருந்து படைகளை விலக்கிக் கொள்வது பற்றிய நடைமுறைகள் பற்றி விவாதிக்கப்பட்டதாகவும் இருதரப்பிலும் அவ்வாறே முன்னெடுக்கப்படும் என்றும் தகவலறிந்த வட்டாரங்கள் குறிப்பிடுகின்றன.

"இந்தியா - சீனா இடையே ராணுவத் தளபதிகள் நிலையிலான பேச்சுகள் மோல்டோவில் நேற்று திங்கள்கிழமை நடைபெற்றது. விலகுவது குறித்துப் பரஸ்பரம் ஒப்புக்கொள்ளப்பட்டது. விலகல் பற்றிய நடைமுறைகள் விவாதிக்கப்பட்டது, இதுதரப்பும் இதை நடைமுறைப்படுத்தும்" என்று இந்திய  ராணுவம் தெரிவித்திருக்கிறது.

கிழக்கு லடாக் பகுதியில் சீன ராணுவக் குவிப்பின் காரணமாக ஏற்பட்டுள்ள  பதற்றத்தைத் தணிக்க, உண்மை கட்டுப்பாட்டுக் கோட்டின் அருகே சீனப் பகுதியிலுள்ள மோல்டோ என்ற இடத்தில் நேற்று பகல் 11.30 மணிக்குத் தொடங்கி இந்தப் பேச்சு நடைபெற்றது.

ராணவத் தளபதிகள் நிலையில் நடைபெற்றுள்ள இரண்டாவது கூட்டம் இது. ஏற்கெனவே ஜூன் 6 ஆம் தேதியும் ஒரு கூட்டம் நடைபெற்றது. உண்மை கட்டுப்பாட்டுக் கோட்டின் நெடுகில் மே 4 ஆம் தேதிக்கு முந்தைய நிலைமைக்கு சீன ராணுவம் திரும்ப வேண்டும் என்று இந்திய வலியுறுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.