கர்நாடகத்தில் கரோனா பாதித்த ரிசர்வ் படைக் காவலர் தற்கொலை
கர்நாடக மாநில ரிசர்வ் படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.


பெங்களூரு: கர்நாடக மாநில ரிசர்வ் படையைச் சேர்ந்த தலைமைக் காவலர் கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இந்த நிலையில், கர்நாடக மாநில ரிசர்வ் படைப் பிரிவுகளின் தளபதி உள்பட 50-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து காவல்துறை கூடுதல் இயக்குநர் அலோக் குமார் கூறுகையில், 50 வயது தலைமைக் காவலருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், திங்கள்கிழமை இரவு அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற போது, வாகனத்திலேயே கயிற்றால் கழுத்தை நெறித்து தற்கொலை செய்து கொண்டார்.
இந்த நிலையில், கர்நாடக மாநில ரிசர்வ் படையில் பணியாற்றும் ஐபிஎஸ் அதிகாரிக்கும் கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் உள்பட இந்தப் படைப் பிரிவைச் சேர்ந்த 50 -க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...