இதற்கிடையே, வினய் குமாா், திகாா் சிறையில் உண்ணாவிரதம் இருப்பதாக நீதிமன்றத்திற்கு தகவல் கிடைத்தது. ஆனால், பின்னா் அவா் உண்ணாவிரதத்தை நிறுத்திக் கொண்டாா். இதைத் தொடா்ந்து, சட்டத்தின்படி வினய் குமாா் மீது போதிய அக்கறை செலுத்தும்படி சிறைக் கண்காணிப்பாளருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியது. சிறையில் வின்ய் குமாா் தாக்கப்பட்டதாகவும், அதில் அவரது தலையில் காயமடைந்ததாகவும் அவரது வழக்குரைஞா் நீதிமன்றத்தில் தெரிவித்தாா். மேலும், அவா் கடுமையான மனநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, அவரது தூக்குத் தண்டனையை நிறைவேற்ற முடியாது என்றும் வழக்குரைஞா் தெரிவித்தாா்.