ராஜஸ்தானை இன்று சந்திக்கும் சென்னை! முதல் வெற்றி யாருக்கு?தமிழகத்தில் கூட்டாளிகள்; கேரளத்தில் 'எதிரிகள்'! - மோடி தாக்குபெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு தடையின்றி கிடைக்க தீவிர நடவடிக்கை: மத்திய அரசுவிஜய் இன்று வேட்புமனு தாக்கல்!மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.4 வரை மழைக்கு வாய்ப்பு!வேட்புமனு தாக்கல் அனுமதிக்கப்படாத 4 பொது விடுமுறை நாள்கள் விவரம்!வேட்புமனு தாக்கல் இன்று தொடக்கம்! வேட்பாளா்களுக்கு கட்டுப்பாடு!!
/

நிர்பயா குற்றவாளிகளுக்கு நாளை தூக்கு இல்லை

நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :2 மார்ச் 2020, 12:36 pm

DIN


புது தில்லி: நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கு மரண தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைத்து தில்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு நால்வருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட வேண்டும் என்று விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த வாரண்டை நிறுத்தி வைத்தும், அடுத்த உத்தரவு பிறப்பிக்கப்படும் வரை மரண தண்டனை நிறுத்தி வைக்கப்படுவதாகவும் தில்லி நீதிமன்றம் கூறியுள்ளது.

நிர்பயா குற்றவாளிகள் நால்வருக்கும் நாளை காலை மரண தண்டனை நிறைவேற்றப்பட இருந்த நிலையில், தொடர்ந்து 3வது முறையாக தேதி குறிப்பிடப்பட்டு மரண தண்டனை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குற்றவாளிகளில் ஒருவரான பவன் குமார் குப்தா சார்பில் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் நிலையில், அது நிலுவையில் இருப்பதால் 3ம் தேதி நால்வரையும் தூக்கிலிட தடை விதிக்குமாறு பவன் குப்தா சார்பில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தில்லி நீதிமன்றம், குற்றவாளிகள் நால்வரையும் தூக்கிலிட தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.