ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

கால்நடை பெண் மருத்துவர் கொல்லப்பட்ட அதே பகுதியில்.. மீண்டும் ஒரு அதிர்ச்சி சம்பவம்

கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அதே பகுதியில், பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :17 மார்ச் 2020, 12:18 pm


ஹைதராபாத்: கால்நடை பெண் மருத்துவர் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்ட அதே பகுதியில், பெண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சைபராபாத் காவல்நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் செவெல்லா என்ற இடத்தில் உள்ள பாலத்துக்குக் கீழே நிர்வாணமாகக் கிடந்த பெண்ணின் உடலில், முகம் முற்றிலும் சிதைக்கப்பட்டுள்ளது.

இந்த இடத்துக்கு மிக அருகில் தான் கடந்த நவம்பர் 2019ல் பெண் மருத்துவர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.

தங்கேடப்பள்ளி கிராமத்துக்கு வெளியே இருக்கும் அந்த பாலத்துக்குக் கீழே ஒரு பெண்ணின் உடல் இருப்பதை, அவ்வழியாகச் சென்றவர்கள் பார்த்து காவல்துறைக்குத் தகவல் கொடுத்தனர். உடலைக் கைப்பற்றிய காவல்துறையினர், பெண்ணின் உடலில் கை மூட்டு மற்றும் தொண்டைப் பகுதியில் கத்தியால் கீறிய காயங்கள் இருப்பதையும் கண்டறிந்தனர்.

முதற்கட்ட விசாரணையில், கொலைகாரர்கள், நைலான் கயிறைக் கொண்டு அப்பெண்ணின் கழுத்தை நெறித்துக் கொன்றிருக்கலாம். வேறு இடத்தில் இந்த கொலையைச் செய்துவிட்டு, பெண்ணின் உடலை இங்கே வீசியிருப்பதாகவும், அடையாளம் தெரிந்து விடக் கூடாது என்பதற்காகவே ஆடைகளை எடுத்துச் சென்றுள்ளனர். முகத்தையும் அடையாளம் தெரியாத அளவுக்கு சிதைத்துள்ளனர் என்று கூறியுள்ளனர்.

உடற்கூறு சோதனைக்குப் பிறகே அப்பெண் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தப்பட்டாரா என்பது குறித்து தெரிய வரும் என்றும் காவல்துறை கூறியுள்ளது.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொலையுண்ட பெண் 25 - 30 வயதுக்குட்பட்டவராக இருக்கலாம் என்றும், சம்பவம் தொடர்பாக எந்த சாட்சியமும் அந்த இடத்தில் கிடைக்கவில்லை. பெண்ணின் உடலிலும் வேறு எந்த அடையாளங்களும் இல்லை. விசாரணை முடுக்கிவிடப்பட்டிருப்பதாகக் காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.