காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் மீண்டும் அத்துமீறித் தாக்குதல் நடத்தியது.
கடந்த 2003-ஆம் ஆண்டு இந்தியா-பாகிஸ்தான் இடையே போா் நிறுத்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. எனினும் இந்த ஒப்பந்தத்தை மீறி பாகிஸ்தான் ராணுவ அவ்வப்போது தாக்குதல் நடத்துவதை வாடிக்கையாக கொண்டுள்ளது.
இந்தநிலையில் ஜம்மு-காஷ்மீரின் எல்லைப்பகுதியான பூஞ்ச் மாவட்டத்தில் உள்ள டெக்வார் பகுதியில் இன்று காலை பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்தியது. சிறிய ரக ஆயுதங்கள், பீரங்கி குண்டுகள் ஆகியவை கொண்டு தாக்குதல்கள் நடத்தப்பட்டன.
இதற்கு எல்லையில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய ராணுவ வீரா்கள் தரப்பில் தக்க பதிலடி கொடுக்கப்பட்டது. எனினும் இந்த சண்டையில் இந்திய தரப்புக்கு எந்தவித சேதமும் ஏற்படவில்லை.