கரோனா அச்சுறுத்தல் காரணமாக பெரும்பாலான ஸ்பைஸ்ஜெட் விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
போதிய இருக்கைகள் முன்பதிவு செய்யப்படாததால், இந்தியாவில் இருந்து உலக நாடுகளுக்குச் செல்லும் சர்வதேச விமானங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
மார்ச் 21ம் தேதி முதல் ஏப்ரல் 30ம் தேதி வரை இயக்கப்பட வேண்டிய பல சர்வதேச விமானச் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக ஸ்பைஸ்ஜெட் அறிவித்துள்ளது.