இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள அமேசான் ஊழியர்கள் 6 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உலகெங்கிலும் உள்ள பெரும்பாலான மக்கள் அமேசான் மற்றும் பிளிப்கார்ட் போன்ற ஆன்லைன் விற்பனையாளர்களை நம்பியுள்ளனர். ஆனால், உலகம் முழுவதும் கரோனா தொற்று தீவிரமாகப் பரவி வரும் நிலையில், அமேசான், பிளிப்கார்ட் நிறுவனங்களும் தங்களது சேவையை நிறுத்தியுள்ளன.
இதில், நியூயார்க் நகரம், ஜாக்சன்வில்லி, புளோரிடா, ஷெப்பர்ட்ஸ்வில்லி, கென்டக்கி, கேட்டி, டெக்சாஸ், பிரவுன்ஸ்டவுன், மிச்சிகன் உள்ளிட்ட பகுதிகளில் உள்ளவர்கள் பெரும்பாலோனோர் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதிகளில் உள்ள அமேசான் கிடங்குகளில் வேலை செய்தவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், இத்தாலி மற்றும் ஸ்பெயினில் உள்ள அமேசான் கிடங்குகளில் வேலை செய்த ஊழியர்கள் 6 பேருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. எனவே இங்கு வேலை செய்தவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு நிறுவனம் கேட்டுக் கொண்டுள்ளது.
முன்னதாக, அமேசான் மற்றும் ஃபிளிப்கார்ட் நிறுவனங்கள் அத்தியாவசியப் பொருட்கள் தவிர மற்ற சேவைகளை நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கச்சா எண்ணெய் விலை உயர்வு: 24,000 புள்ளிகளுக்குக் கீழே நிஃப்டி.. சென்செக்ஸ் 1,000 புள்ளிகள் சரிவு!

கோஹினூர் வைரத்தை இந்தியாவிடம் கொடுக்க பிரிட்டன் மன்னரிடம் கோருவேன்! மம்தானி
மே 4 - எங்கும் தாமரை மலரும்! பாஜக

மதுரை நகரை வந்தடைந்தார் கள்ளழகர்! எதிர்சேவையில் ஆடல், பாடலுடன் உற்சாக வரவேற்பு!!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


