மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

காஷ்மீரில் கரோனா பாதிப்பு 41ஆக உயர்வு

காஷ்மீரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :30 மார்ச் 2020, 8:18 am

DIN

காஷ்மீரில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது. 

கரோனா வைரஸ் தாக்கம்  தற்போது உலகை அச்சுறுத்தி வருகிறது. இதனால் இந்தியா முழுவதும் கடந்த 25ஆம் தேதி முதல் தொடர்ந்து 21 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் வெளியே நடமாட வேண்டாம் என்றும் அத்தாவசிய  பொருட்கள் வாங்க மட்டும்
வெளியே வந்தால் போதும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

இந்த நிலையில் ஜம்முவில் மேலும் 3 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை காஷ்மீர் அரசின் செய்தி தொடர்பாளர் ரோஹித் கன்சால் டிவிட்டரில் உறுதி செய்துள்ளார். இத்துடன் அங்கு கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 41ஆக உயர்ந்துள்ளது.

இன்று காலை நிலவரப்படி இந்தியாவில் கரோனா வைரஸுக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1071ஆக உயர்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. கரோனா பாதிப்புக்குள்ளான 29 பேர் பலியான நிலையில் 99 பேர் குணடைந்து வீடு திரும்பியுள்ளனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.