வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

ஆந்திரத்தைத் தொடர்ந்து சத்தீஸ்கரிலும் வாயு கசிவு: 7 தொழிலாளர்கள் பாதிப்பு

​சத்தீஸ்கரில் காகித ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 7 பேர் வாயு கசிவால் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

News image
Updated On :7 மே 2020, 11:02 am

DIN


சத்தீஸ்கரில் காகித ஆலையில் பணிபுரியும் தொழிலாளர்கள் 7 பேர் வாயு கசிவால் பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சத்தீஸ்கரில் செயல்பட்டு வரும் காகித ஆலையில், ரசாயன தொட்டியை தொழிலாளர்கள் 7 பேர் இன்று (வியாழக்கிழமை) அதிகாலை சுத்தம் செய்து வந்தனர். அப்போது வாயு கசிந்ததாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து 7 தொழிலாளர்களின் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதுபற்றி ராய்கார் எஸ்பி தெரிவிக்கையில், "ஆலை உரிமையாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் வியாழக்கிழமை அதிகாலை நடைபெற்றது" என்றார்.

முன்னதாக, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இன்று காலை ஏற்பட்ட விஷவாயு கசிவில் இதுவரை 13 பேர் பலியாகியுள்ளனர். இந்த ஆலையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சுமார் 1,000 பேர் வரை பாதிக்கப்பட்டுள்ளனர்.     

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.