உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

கருப்பு படத்தின் அடுத்த பாடலைப் பாடும் பிரபல நடிகர்! யார் தெரியுமா?

நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் இரண்டாவது பாடல் பற்றி...

Surya in Karuppu movie

கருப்பு பட போஸ்டரில் சூர்யா - X

Published On :

நடிகர் சூர்யாவின் கருப்பு படத்தின் இரண்டாவது பாடலை பிரபல நடிகர் ஒருவர் பாடியிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடிகர் சூர்யா - இயக்குநர் ஆர்.ஜே. பாலாஜி கூட்டணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ’கருப்பு’. இப்படத்தில் சூர்யா வழக்குரைஞராக நடித்துள்ளார். மேலும் த்ரிஷா, ஸ்வாசிகா, காளி வெங்கட், இந்திரன்ஸ், யோகி பாபு, நட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், கருப்பு படத்தின் வெளியீட்டிற்கு நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் நீண்டகாலமாகக் காத்திருகின்றனர்.

சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் முதல் பாடலான ‘காட் மோட்’ வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றிருந்த நிலையில் தற்போது இரண்டாவது பாடல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.

சாய் அபயங்கருடன் சிம்பு

சாய் அபயங்கருடன் சிம்பு

இரண்டாவது பாடலை பிரபல நடிகர் சிம்பு பாடியிருப்பதாகவும், விரைவில் பாடல் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. இதனை, உறுதிப்படுத்தும் விதமாக சாய் அபயங்கர் தனது ஸ்டுடியோவில் சிம்புவுடன் எடுத்தப் புகைப்படம் வைரலாகி வருகிறது.

கருப்பு திரைப்படம் ஏப்ரல் வெளியீடாக வருமென்று கூறப்பட்ட நிலையில் வெளியீடு தள்ளிப்போவதாக இயக்குநர் ஆர்ஜே பாலாஜி தெரிவித்திருந்தார். படம் மே மாதம் வெளியாக வாய்ப்பிருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

Summary

Popular actor has sung the second song of actor Suriya's film Karuppu.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.