

நாசிக்: மகாராஷ்டிராவின் நாசிக் மாவட்டத்தில் புதிதாக 50 பேருக்கு கரோனா உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில், மொத்தம் பாதிப்பு எண்ணிக்கை 622 ஆக உயர்ந்துள்ளது என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் 49 பேர் மாலேகானைச் சேர்ந்தவர்களும், ஒருவர் நாசிக் நகரத்தைச் சேர்ந்தவர்கள் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மொத்த பாதிப்புகளில், 497 பேர் மாலேகானைக் சேர்ந்தவர்கள், 45 நாசிக் நகரத்தையும், 61 பேர் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். கரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 19 ஆக உள்ளது. இதுவரை 46 பேர் நோயிலிருந்து மீண்டு வீடு திரும்பியுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.