இதுவரை 20 லட்சம் புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் ரயில் மூலம் சொந்த மாநிலம் திரும்பினா்
புலம்பெயா்ந்த தொழிலாளா்கள் சொந்த மாநிலம் திரும்ப இதுவரை 1,565 சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டுள்ளன. அவற்றில் 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளா்கள் தங்கள் மாநிலங்களுக்கு திரும்பியுள்ளனா் என்று இந்திய ரயில்வே செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.










