பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புவிளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நாசிக் மாவட்டத்தில் மேலும் 23 பேருக்கு கரோனா தொற்று: பாதிப்பு 890 ஆனது

மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 890 ஆக உயர்ந்துள்ளது. 

News image
Updated On :22 மே 2020, 5:43 am

PTI


மகாராஷ்டிரா மாநிலத்தின் நாசிக் மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கு கரோனா தொற்று பதிவாகியுள்ள நிலையில், அந்த மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 890 ஆக உயர்ந்துள்ளது. 

புதிதாகப் பாதிக்கப்பட்டவர்களில் மாலேகான் நகரத்தைச் சேர்ந்த 11 பேரும், நாசிக் நகரத்தைச் சேர்ந்த 8 பேரும் ஆவார். மேலும் நான்கு பேர் வெளி மாவட்டத்தைச் சேர்ந்தவர்களாவர். 

இந்த புதிய வழக்குகள் மூலம், வடக்கு மகாராஷ்டிராவில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 890 ஆக உயர்ந்துள்ளது என்று அந்த சுகாதாரத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மொத்த வழக்குகளில் 684 மாலேகானில் இருந்தும், 59 நாசிக்கிலிருந்தும், 111 மாவட்டத்தின் பிற பகுதிகளிலிருந்தும் பதிவாகியுள்ளன. வெளிமாவட்டத்தைச் சேர்ந்த 36 பேர் மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். 

இதுவரை, மாலேகானில் 654 - 504 வரை நோயிலிருந்து மீண்டுள்ளனர். 46 பேர் கரோனாவுக்கு பலியாகியுள்ளனர். இவர்களில் 43 பேர் மாலேகானில் இருந்து பதிவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.